அயோத்தியில் புதிதாக மசூதி கட்டப்படுமா? : சன்னி வக்ஃபு வாரியம் இன்று முடிவு செய்கிறது
Feb 24 2020 11:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அயோத்தியில், மசூதி கட்டுவது தொடர்பாக சன்னி வக்ஃபு வாரியம் இன்று முடிவெடுக்க உள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர்கோயில் கட்டலாம் என்றும், புதிதாக மசூதி கட்டுவதற்கு அயோத்தியிலேயே 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம் ஏற்கக்கூடாது என பல இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தின. இந்த நிலையில், லக்னோவில் சன்னி வக்ஃபு வாரியத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. மசூதி கட்டுவதற்கு மாநில அரசு வழங்கிய நிலத்தை பெற்றுக் கொள்வதா? அல்லது நிராகரிப்பதா? என்பது குறித்து இக்கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படுகிறது.