குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி மொஜ்புர் போராட்டத்தில், காவலர் ஒருவர் உயிரிழப்பு - அசாதாரண சூழல் நிலவுவதால், 10 இடங்களில் 144 தடை உத்தரவு
Feb 24 2020 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் Maujpur பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில், காவலர் ஒருவர் உயிரிழந்தார். அசாதாரண சூழல் நிலவுவதால், வடகிழக்கு டெல்லியில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Maujpur அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் ஞாயிற்றுக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் வடகிழக்கு பகுதிகளான Jaffrabad, Maujpur, bhajanpura ஆகிய பகுதிகளில் இன்று வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். Jaffrabad, Maujpur, Babarpur ஆகிய மெட்ரோ ஸ்டேஷன்கள் மூடப்பட்டுள்ளன. மஜ்பூரில் போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்கியதில், ரத்தன்லால் என்ற தலைமைக் காவலர் உயிரிழந்தார். துணை ஆணையர் உட்பட ஏராளமான போலீசார் காயமடைந்துள்ளனர். 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.