தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டம் - முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி மீண்டும் அமல்
Feb 26 2020 10:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் ஓய்வூதிய திட்டத்தில், முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதி மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இந்த வசதி, திரும்ப பெறப்பட்டிருந்த நிலையில், தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆணையை மத்திய தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறையின் அறிவிப்பால், 6 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் பயன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.