டெல்லி வன்முறை - கபில் மிஸ்ரா வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதே டெல்லி வன்முறைக்கு காரணம் : கவுதம் காம்பீர் குற்றச்சாட்டு
Feb 26 2020 11:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரதிய ஜனதாவைச் சேர்ந்த திரு. கபில் மிஸ்ரா, வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதே, டெல்லி வன்முறைக்கு காரணம் என அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் திரு. கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். போலீசாரை, துப்பாக்கியை காட்டி மிரட்டுவது கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்த காம்பீர், எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், வன்முறையை துாண்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதனிடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவல், சம்பவ பகுதிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக டெல்லி நிலவரம் குறித்து, நேற்றிரவு அவசர ஆலோசனையும் நடத்தினார். கடந்த 24 மணி நேரத்தில், உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தலைமையில், 3 முறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது குறப்பிடத்தக்கது.