ரயில் விபத்துகளில் ஒரு உயிரிழப்புகூட இல்லாமல் பாதுகாப்பானதாக அமைந்த 2019ம் ஆண்டு - ரயில்வே நிர்வாகம் பெருமிதம்
Feb 26 2020 12:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடந்த 11 மாதங்களில், ரயில் விபத்துகளில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்றும், மிகவும் பாதுகாப்பான ஆண்டாக இது அமைந்துள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், கடந்த 24-ம் தேதிவரை, ஒருவர் கூட உயிரிழக்காமல் பாதுகாப்பான பயணத்தை ரயில்வே நிர்வாகம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளம் புதுபித்தல், தண்டவாள பராமரிப்பு, சிக்னல்கள் பராமரிப்பு, பழைய பெட்டிகளை அகற்றி, நவீன பெட்டிகளை இணைத்தது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்து நிலைகளிலும், விபத்துக்களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 166 ஆண்டு ரயில்வே வரலாற்றில், இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.