டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30-ஆக அதிகரிப்பு - தொடர்ந்து ஐந்தாவது நாளாக நீடிக்கும் பதற்றம் - இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Feb 27 2020 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கும், ஆதரிப்பவர்களுக்கும் இடையே, டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 200-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லியின் சில இடங்களில் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் பதற்றமான சூழழ் நிலவுவதாகக் கூறப்படுகிறது. கலவரம் காரணமாக, டெல்லி கிழக்குப்பகுதியில் உள்ள பள்ளிகளில் சி.பி.எஸ்.சி. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.