இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம்.-களில் பயன்படுத்தக்கூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Feb 27 2020 11:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம்.-களில் பயன்படுத்தக்கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியன் வங்கி தனது ஏ.டி.எம்.-களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாக அண்மையில் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து மற்ற வங்கிகளும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதைக் குறைக்கப்போவதாக தெரிவித்தன. ஆனால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை நிறுத்துமாறு வங்கிகளுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதால், அதனை அச்சிடும் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.