வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் : விருப்பமுள்ள எந்த பெண்ணும் வாடகைத்தாயாக இருக்கலாம்
Feb 27 2020 11:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெருங்கிய உறவுப்பெண் மட்டுமின்றி, விருப்பமுள்ள எந்த பெண்ணும் வாடகைத்தாயாக இருக்கலாம் என்ற வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குழந்தை பேறு இல்லாத தம்பதியருக்கு வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்றுத்தரும் பெண்கள், சம்பந்தப்பட்ட தம்பதிக்கு நெருங்கிய உறவுக்கார பெண்களாக இருக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்டு மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய மசோதாவின்படி, நெருங்கிய உறவுப்பெண் மட்டுமின்றி, விருப்பமுள்ள எந்த பெண்ணும் வாடகைத்தாயாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.