நாட்டை காக்க எல்லை தாண்டிய தாக்குதலுக்கு தயங்கியதில்லை : பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Feb 27 2020 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டை பாதுகாக்க, எல்லை தாண்டி தாக்குதல் நடத்த தயங்கியதில்லை என்று, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது, இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தி அழித்தது. இது நடைபெற்று ஓராண்டானதையொட்டி, சமூக வலைதளமான டுவிட்டரில், பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், பாலகோட் வான்வழித் தாக்குதல்களின் போது, இந்திய விமானப்படையின் ஒப்பற்ற துணிச்சல் மற்றும் தைரியத்திற்கு தலைவணங்குவதாகவும், பிரதமர் மோதி தலைமையிலான அரசு, வித்தியாசமான அணுகுமுறையை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக, நாட்டை பாதுகாக்க எல்லை தாண்டி சென்று தாக்குதல் நடத்த தயங்கியதில்லை என்று குறிப்பிட்ட அவர், பயங்கரவாதம் தொடர்பான அணுகுமுறையிலும், பதிலடி கொடுக்கும் முறையிலும் மாற்றத்தை கொண்டுவந்த பிரதமர் நரேந்திர மோதிக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00