பா.ஜ.க.வின் கபில் மிஸ்ரா வெளியிட்ட ட்விட்டர் பதிவால் சர்ச்சை : கலவரம் ஏற்படும் அபாயம் இருப்பதாக டெல்லி உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை டெல்லி போலீசார் அலட்சியப்படுத்தியதாக தகவல்
Feb 27 2020 2:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பா.ஜ.க.-வைச் சேர்ந்த கபில் மிஸ்ரா வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்குப்பின், கலவரம் ஏற்படும் அபாயம் இருப்பதாக டெல்லி உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை, டெல்லி போலீசார் அலட்சியப்படுத்தியதாக தகவல் வெளியாகிவுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் பெரும் கலவரம் ஏற்பட்டதற்கு, பா.ஜ.க. தலைவர்கள் சிலர் தெரிவித்த கருத்தே காரணம் எனக் கூறப்படுகிறது. டெல்லி நீதிமன்றமும், அவர்களின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை, பா.ஜ.க.வைச் சேர்ந்த திரு. கபில் மிஸ்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில், போராட்டப்பகுதிக்கு வரும்படி மக்களுக்கு ஒரு அழைப்பு விடுத்திருந்தார். கபில் மிஸ்ராவின் ட்வீட் அழைப்பால் கலவரம் ஏற்படும் அபாயம் இருப்பதாக, டெல்லி காவல் நிலையங்களுக்கு, உளவுத்துறை தகவல் அனுப்பியதாகவும், அதனை காவல்துறை அலட்சியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. தாங்கள் விடுத்த எச்சரிக்கையை, டெல்லி போலீசார் புறக்கணித்ததே, கலவரத்திற்கு காரணம் என உளவுத்துறை தெரிவித்துள்ளது.