டெல்லியில் இயல்பு நிலை திரும்பியிருப்பதால் மக்‍கள் அச்சமின்றி வெளியே வரலாம் - உரிய பாதுகாப்பு அளிக்‍கப்படும் என டெல்லி காவல்துறை அறிவிப்பு

Feb 27 2020 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாகவும், வீடுகளுக்‍குள்ளேயே முடங்கியுள்ள மக்‍கள், அச்சமின்றி வெளியே வரலாம் என்றும், பாதுகாப்பிற்கு தாங்கள் உள்ளதாகவும் டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, டெல்லியில், கடந்த 23-ம் தேதி முதல் நடைபெற்றுவரும் வன்முறை சம்பவங்கள் கட்டுக்‍குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயல்பு நிலை திரும்பியுள்ளதாகவும், கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டு வருவதாகவும், டெல்லி காவல் சிறப்பு ஆணையர் திரு. ஸ்ரீவட்சவ் தெரிவித்துள்ளார்.

வீடுகளுக்‍குள்ளேயே முடங்கியுள்ள மக்‍கள், அச்சமின்றி வெளியே வரலாம் என்றும், தேவையான பொருட்கள் வாங்க அனைத்து கடைகளும் திறக்‍கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பிற்கு தாங்கள் உள்ளதாகவும், டெல்லி காவல் இணை ஆணையர் திரு. ஓ.பி.மிஷ்ரா கூறியுள்ளார்.

இதனிடையே, டெல்லியில், கலவரம் ஏற்பட்ட அன்று, சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்‍களை, போலீசாரே உடைக்‍கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00