டெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல்துறை உத்தரவு
Feb 27 2020 9:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நிகழ்ந்த கலவரம் மற்றும் வன்முறைகளில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. கலவரத்தில் படுகாயம் அடைந்த 200-க்கும் மேற்பட்டோருக்கு, பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கலவரம் தொடர்பாக 48 எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கலவரம் தொடர்பான வழக்குகளை குற்றப்பிரிவிற்கு மாற்றி, டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும், துணை ஆணையர் ஒருவரின் தலைமையில், 4 உதவி ஆணையர்கள் செயல்படுவார்கள் எனவும் டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.