டெல்லியில் நிகழ்ந்த வன்முறையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு - உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி

Feb 27 2020 9:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு, பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் ஜாபராபாத், சீலம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டங்களில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. இதனால், போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்படுத்தினர். சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இந்த வன்முறை சம்பவங்களில் தலைமை காவலர், உளவுத்துறை அதிகாரி உள்பட இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இருநூறுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கலவரத்தில் வீடுகளை இழந்தோருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00