மகாராஷ்டிராவில் அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயம் : சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேறியது
Feb 27 2020 9:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மராத்தி மொழி கட்டாயம் என்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. இதன் மூலம், 2020-2021 கல்வியாண்டில் இருந்து 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் மராத்தி கட்டாய பாடமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில், பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.