டெல்லியில் பிரதமர் மோதியுடன் மியான்மர் அதிபர் பேச்சுவார்த்தை - ஆள்கடத்தலை தடுப்பது உள்ளிட்ட 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து
Feb 28 2020 12:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வளர்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைந்து மேற்கொள்வது, ஆள்கடத்தலைத் தடுப்பது உள்ளிட்டவை தொடர்பாக, இந்தியா - மியான்மர் இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மியான்மர் அதிபர் யு வின் மைன்ட், தனது மனைவி டாவ் சோசோவுடன், இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், பிரதமர் திரு. நரேந்திர மோதி உள்ளிட்டோர் அவர்களை வரவேற்றனா்.
இதைத் தொடர்ந்து, அதிபர் யு வின் மைன்ட், பிரதமர் திரு. மோதியுடன், டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரண்டு நாடுகளுக்குமிடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முக்கியமாக, 'ஆள்கடத்தலைத் தடுப்பதில் ஒருங்கிணைந்து செயல்படுவது, கடத்தப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு அளிப்பது' என்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
முன்னதாக, மியான்மர் அதிபர் யு வின் மைன்டும், அவரது மனைவி டாவ் சோ சோவும், ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.