டெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல் துறை உத்தரவு
Feb 28 2020 12:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்களுக்கு எதிராக, தற்போது வழக்குப்பதிவு செய்ய முடியாது என, டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய, பா.ஜ.க.,வைச் சேர்ந்த திரு. கபில் மிஸ்ரா உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்றும், வழக்குப்பதிவு தொடர்பாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும், டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்களுக்கு எதிராக, தற்போது வழக்குப்பதிவு செய்ய முடியாது என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
கலவரங்கள் குறித்து வீடியோ ஆதாரங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும், அதற்கு பின்னரே வழக்குப்பதிவு செய்ய முடியும் என்றும், அரசு தலைமை வழக்கறிஞர்திரு. துஷர் மேத்தா காவல் துறை சார்பில் பதிலளித்தார். பதிலை, பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம், வழக்கை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி திரு. முரளிதர், பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. டி.என். பட்டேல் மற்றும் நீதிபதி திரு. ஹரிஷங்கர் பிரசாத் அமர்வு இவ்வழக்கை விசாரித்தது குறிப்பிடத்தக்கது.