சர்ச்சை சாமியார் நித்யானந்தாவை கண்டுபிடித்தே தீர வேண்டும் - கர்நாடக காவல்துறைக்கு ராம்நகர் நீதிமன்றம் 'சர்ச் வாரன்ட்'
Feb 28 2020 10:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்ச்சை சாமியார் நித்யானந்தாவை கண்டுபிடிக்க, கர்நாடகா ராம்நகர் நீதிமன்றம் 'சர்ச் வாரன்ட்' பிறப்பித்துள்ளது. நித்யானந்தா மீது, ராம்நகர் மாவட்ட மூன்றாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் பாலியல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது, நேரில் ஆஜராவதற்கு அளிக்கப்பட்ட விலக்கு மற்றும் ஜாமின் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவர் எங்குள்ளார் என்பது தெரியாததால், சர்ச் வாரன்ட் பிறப்பிக்கும்படி, சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனு நீதிபதி திரு. சித்தலிங்கா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நித்யானந்தாவுக்கு எதிராக சர்ச் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அவருக்கு உத்தரவாதம் அளித்த நபரை கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.