பிரதமர் நரேந்திரமோடியை புகழ்ந்து பேசிய விவகாரம் - உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு வழக்கறிஞர் சங்கம் எதிர்ப்பு
Feb 28 2020 11:03AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்சநீதிமன்ற நீதிபதி திரு. அருண் மிஸ்ரா பிரதமர் திரு. நரேந்திர மோதியை புகழ்ந்து பேசியதற்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற சர்வதேச நீதித்துறை மாநாட்டில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி திரு. அருண் மிஸ்ரா, பிரதமர் திரு. மோதி, தொலைநோக்குப் பார்வை உடையவர் எனவும், பல்துறை வல்லுநர் எனவும், உலகளாவிய சிந்தனையாளர் எனவும் புகழ்ந்தார்.
இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், இவ்வாறான புகழ்ச்சி நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிப்பதுடன் வழக்கு தொடுப்பவர்களின் நம்பிக்கையையும் சிதைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற பேச்சுக்களையும், அரசியல் தலைவர்களுடனான நெருக்கத்தையும் நீதிபதிகள் தவிர்க்க வேண்டும் எனவும் வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.