டெல்லி கலவரத்திற்கு பா.ஜ.க. தலைவர்களின் வெறுப்புணர்ச்சி பேச்சுகளே காரணம் என கருத்து தெரிவித்த விவகாரம் - சோனியா காந்தி உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதிமன்றத்தில் வழக்கு
Feb 28 2020 11:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக, காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா, திரு. ராகுல், பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில், பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
டெல்லி வன்முறைச் சம்பவங்களுக்கு வெறுப்புணா்வு பேச்சுகளே காரணம் என காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி, திரு.ராகுல் காந்தி, திருமதி பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என உயா்நீதிமன்றத்தில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.