டெல்லியில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 18 சிறப்பு குழுக்கள் அமைப்பு - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

Feb 28 2020 7:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 18 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு டெல்லியில், குடியுரிமை சட்டத்தின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் ஏற்பட்ட கலவரத்தில் 42 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஜாப்ராபாத், மாஜ்பூர், ஷாகின்பாக் உள்ளிட்ட பல பகுதிகளில் கலவரம் வெடித்ததில், ஏளாமான வீடுகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 18 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த குழுக்கள் மூலம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வீடுகளை இழந்தவர்கள் தங்குவதற்கு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வீடுகளை இழந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் முதற்கட்டமாக 25 ஆயிரம் ரூபாய் நாளை வழங்கப்படும் என்றும், மீதமுள்ள தொகை 2 முதல் 3 நாட்களுக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00