கொரோனா வைரசை தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ஆலோசனை
Mar 27 2020 2:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரசை தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாநில ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த், காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். குடியரசு துணைத்தலைவர் திரு.வெங்கையா நாயுடுவும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டார். கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவ பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும், குடியரசுத்தலைவர் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.