கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே மாதம் 3-ம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வு ஒத்திவைப்பு : மத்திய மனிதவள அமைச்சகம் அறிவிப்பு
Mar 28 2020 3:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக "நீட்" தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மே 3-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய மனித வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனை மத்திய அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால், அவரது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இதனிடையே, கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக, மேலும் 121 அரசு ஆய்வகங்களுக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், கொரோனா வைரஸ் நோயாளிகளை பரிசோதிப்பதற்கான ஆய்வகங்களின் எண்ணிக்கை, 157 ஆக அதிகரித்துள்ளது.