கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு எதிரொலி - டெல்லியிலிருந்து கால்நடையாகவே கூட்டம் கூட்டமாக சொந்த மாநிலத்திற்கு திரும்பும் உத்தரப்பிரதேச மக்கள்
Mar 28 2020 10:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் பாதிப்பால் டெல்லியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அங்கிருந்து கால்நடையாகவே கூட்டம் கூட்டமாக உத்தரப்பிரதேசம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் இந்தியா முழுவதும் கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. பல லட்சம் மக்கள் தங்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் குடியேறி இருக்கும் பிற மாநில மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள தங்கள் சொந்த ஊர்களை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து செல்கின்றனர். அவர்கள் அனைவரும் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்தே செல்கின்றனர். ஊரடங்கு காரணமாக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் இந்நிலைக்கு ஆளாகியுள்ளனர்.