கொரோனா பரவலை தடுக்க சிறப்பு திட்டம் தயார் என ராணுவத் தளபதி முகுந்த் அறிவிப்பு - வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த 8 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்
Mar 28 2020 11:05AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பரவலை தடுக்க Operation Namaste என்ற திட்டம் தயாராக இருப்பதாகவும், கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த 8 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ராணுவ தளபதி திரு. மனோஜ் முகுந்த் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா வைரஸ் தொற்றை ஆரம்பக் கட்டத்திலேயே தடுக்க இந்தியா போராடி வருவதாகவும், அதேநேரம், வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்தால் தக்க நடவடிக்கை எடுக்க ராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார். கொரேனா வைரஸை கட்டுப்படுத்துவதில் அடுத்த சில வாரங்கள் முக்கியமானவை எனத் தெரிவித்த அவர், அரசின் அழைப்புக்கு ஏற்ப உதவ தயாராக இருப்பதாக கூறினார். கொரோனா பரவலை தடுக்க Operation Namaste என்ற திட்டம் தயாராக இருப்பதாகவும், கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்டுத்த 8 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ராணுவ தளபதி திரு. மனோஜ் முகுந்த் குறிப்பிட்டார்.