நாடு முழுவதும் அமலில் இருக்கும் 21 நாள் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்

Mar 31 2020 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக நாடு முழுவதும் அமலில் உள்ள 21 நாள் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் தற்போது இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக, கடந்த 25-ந் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. ஊரடங்கு உத்தரவால் அனைத்து தரப்பு மக்களுக்கும் சிரமங்கள் ஏற்பட்டுள்ள அதேவேளையில் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்போர், சிறு வியாபாரிகள் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து இருப்பதாலும், நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாலும், வருகிற ஏப்ரல் 14-ந் தேதியுடன் முடிவடைய இருக்கும் ஊரடங்கை மேலும் நீட்டிக்க மத்திய அரச திட்டமிட்டு இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாயின.

இதை திட்டவட்டமாக மறுத்துள்ள மத்திய அரசு, 21 நாள் ஊரடங்கை மேலும் நீட்டிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று அறிவித்து உள்ளது. 21 நாள் ஊரடங்கு முடிவடையும்போது அதை மத்திய அரசு நீடிக்க இருப்பதாக வதந்திகள் பரவுவதோடு, சில ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகி உள்ளன - இந்த வதந்திகளும், தகவல்களும் அடிப்படை ஆதாரம் இல்லாதவை என மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் குகா மறுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00