பி.எஸ்.என்.எல். அலைபேசி வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை - கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு வரும் 20ந் தேதி வரை, ப்ரீ பெய்டு காலம் நீட்டிப்பு
Mar 31 2020 1:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, குறைந்த வருமானம் பெறுவோருக்கு உதவும் வகையில், தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், பி.எஸ்.என்.எல். சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளன.
ஏர்டெல், தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி, சஷ்வந்த் சர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா ஊரடங்கு உத்தரவால் வருமானம் இல்லமால் தவித்துவரும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு உதவும் வகையில், 8 கோடி ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு, ப்ரீபெய்டு பேக் முடிவடையும் காலம் வரும் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்கம்மிங் அழைப்புகளை தடையின்றி பெறமுடியும். இத்துடன் ப்ரிபெய்டு வாடிக்கையாளர் எண்களுக்கு 10 ரூபாய் டாக் டைம் வழங்கப்படுகிறது. இதனை அவசர அழைப்புகள், குறுஞ்செய்திக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், வரும் 20ந் தேதி வரை, ப்ரீ பெய்டு காலத்தை நீட்டித்துள்ளது. வாடிக்கையாளர் எண்களுக்கு 10 ரூபாய் வரை டாக்டைம் அளிக்கப்படுகிறது. அவசர அழைப்புகள், குறுஞ்செய்திகளுக்கு இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.