கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, காலாவதியான ஓட்டுநர் உரிமங்கள், வரும் ஜூன் 30-ம் தேதிவரை செல்லும் - மத்திய சாலை போக்குவரத்துறை அறிவிப்பு
Mar 31 2020 1:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் காலாவதியான வாகன ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள், வரும் ஜூன் 30-ம் தேதிவரை செல்லுபடியாகும் என மத்திய போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
தேசிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மத்திய போக்குவரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாகன தரக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமங்கள், வாகன பதிவுச் சான்றிதழ்கள் உள்ளிட்டவை கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதிக்கு பிறகு காலாவதி ஆகியிருந்தால், அது தொடர்பாக போலீசாரும், போக்குவரத்து துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும், அந்த ஆவணங்களை வரும் ஜூன் 30-ம் தேதி வரை ஏற்புக்குரியதாக கருத வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மூன்றாவது நபர் காப்பீட்டு பிரீமியம் வசூலிப்பதை ஐ.ஆர்.டி.ஏ. ஒத்திவைத்திருப்பதால், அடுத்த அறிவிப்பு வரும்வரை பழைய பிரீமியம் தொகையே செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வணிக போக்குவரத்திற்கான டாக்சிகள், பேருந்துகள் உள்ளிட்டவை ஊரடங்கால் தற்போது இயங்காத நிலையில், அவற்றுக்கு வரி தள்ளுபடி அளிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.