கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 90 வயது முதியவர் - வயதான கொரோனா நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை

Mar 31 2020 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என கூறப்பட்ட நிலையில், கேரளாவில் நோய்த்தொற்று ஏற்பட்ட 90 வயது முதியவர் 88 வயதான அவரது மனைவி ஆகியோர் குணமடைந்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக கேரளாவில் மொத்தம் 212 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இத்தாலியில் இருந்து கடந்த பிப்ரவரி 29-ம் தேதி பத்தனம்திட்டாவிற்கு திரும்பியவர்களால் அவர்களது வீட்டிலிருந்த 93 வயதான தாமஸ், 88 வயதான அவரது மனைவி மரியம்மா ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானார்கள். மார்ச் 8-ம் தேதி கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர்கள், தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா உறுதி செய்துள்ளார். இருவருக்குமே சிறுநீரக பிரச்சனைகள் இருந்த நிலையில் தற்போது இருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளதாக சைலஜா தெரிவித்துள்ளார். இருவரும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், சைலஜா தெரிவித்துள்ளார். முதிய தம்பதியை கடும் முயற்சி எடுத்து மீட்ட மருத்துவக் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் சைலஜா தெரிவித்துள்ளார். கொரோனா பாதித்த முதிய தம்பதி, நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிகழ்வு, மருத்துவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00