மக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கவலை

Apr 1 2020 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொதுமக்‍கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்‍காததால், கொரோனா பாதிப்பு நாட்டில் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

கொரோனா தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் திரு. லாவ் அகர்வால், தினசரி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் அவர் அளித்துள்ள பேட்டியில், சரியான நேரத்தில் வைரஸ் தொற்று கண்டறியப்படாமல் தாமதமாவதும், மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லாததும்தான் கொரோனா பரவலுக்‍கு காரணமாக உள்ளதாக தெரிவித்தார். ஒரு நபருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும், அவர் வசிக்கும் பகுதியை வைரஸ் பரவும் பகுதியாக அரசு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

கொரோனாவை எதிர்த்து போராடுவதில் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்று தெரிவித்த திரு. லாவ் அகர்வால், இந்தியா இன்னும் சமூக பரவல் கட்டத்திற்கு செல்லவில்லை என்று மீண்டும் கூறினார். கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளில் எந்த தட்டுப்பாடும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00