டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 95 சதவீதம் பேரை கண்டறிந்து பரிசோதனை - உத்தரப்பிரதேச அரசு தகவல்
Apr 1 2020 3:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில், 95 சதவீதம் பேரை கண்டறிந்து பரிசோதனை செய்துள்ளதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி மாநாட்டில் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றதும், அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநாட்டில் பங்கேற்றவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு சோதனை செய்ய தமிழகம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சுமார் 160 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றதாக வெளியான தகவலையடுத்து, 19 மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டதாக அம்மாநில உள்துறை செயலாளர் திரு. அவனிஷ் கூறியுள்ளார். மாநாட்டில் பங்கேற்றவர்களில் 95 சதவீதம் பேரை கண்டறிந்து பரிசோதனை செய்துள்ளதாகவும், அவர்களில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். 10 முதல் 12 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், அவர்களின் விபரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.