மத்திய அரசு அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு இல்லை - ஊரடங்கு அமலில் இருந்தாலும் பணியிலிருந்து விடுவிப்பு
Apr 1 2020 5:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊரடங்கு அமலில் இருந்தாலும், ஓய்வு பெறும் மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மார்ச் 31-ம் தேதியுடன் ஓய்வு பெறும் மத்திய அரசு அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என கேள்வி எழுந்தது. இதுகுறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்களுக்கு மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதில், மார்ச் 31-ம் தேதி ஓய்வு பெறுவோர் அதே நாளில் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக அலுவலகத்தில் இருந்து பணியாற்றினாலும், வீடுகளில் இருந்து பணியாற்றினாலும் இது பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.