நடிகை கனிகா கபூருக்கு கொரோனா தொற்று இல்லை - ஐந்தாவது முறையாக செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் உறுதி
Apr 5 2020 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகை கனிகா கபூருக்கு ஐந்தாவது முறையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
பாலிவுட் நடிகை கனிகா கபூர் லண்டனில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கடந்த மார்ச் மாதம் இந்தியா திரும்பிய நிலையில், இந்தியாவிலும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்னடனர். இதனைத் தொடர்ந்து கனிகா கபூருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டார். தொடர்ந்து அவருக்கு 4 முறை பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், வைரஸ் தொற்று பாசிட்டிவ் எனத் தெரியவந்தது. இந்நிலையில், 5வது முறையாக மீண்டும் கனிகாவுக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மேலும், ஒரு சோதனை முடிவில் கொரோனா இல்லை என உறுதியாகும் வரை அவர் தொடர்ந்து மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.