நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 104 பேர் உயிரிழப்பு - 3 ஆயிரத்து 730 பேர் பாதிப்பு
Apr 5 2020 5:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 104-ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 730-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படுவதால் சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு 34 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 635-ஆக உயர்ந்தது. தமிழகத்தில், 485 பேரும், டெல்லியில் 445 பேரும், கேரளாவில் 306 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் 272 பேரும், ராஜஸ்தானில் 200 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 179 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வரை, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 104 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 730-ஆக உயர்ந்துள்ளது. 294 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.