ஊரடங்கு உத்தரவு அமலில் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மேம்பட்ட கங்கை நதி
Apr 5 2020 5:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கங்கை நதியின் தரம் மேம்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சத்தால், வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கங்கை, யமுனை நதிகளின் கரைகளில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், அவற்றிலிருந்து கழிவுகள் வெளியேறவில்லை. கங்கை நதியின் தரம் முன்பை விட 50 சதவீதம் மேம்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.