உலகிலேயே மிக உயரமான வல்லபபாய் படேல் சிலையை விற்பதாக விளம்பரம் செய்த மர்ம நபர் - வழக்கு பதிவு செய்யப்பட்டு, தேடும் பணி தீவிரம்
Apr 6 2020 11:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகிலேயே மிக உயரமான வல்லபபாய் படேல் சிலையை 30 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக வலைதளத்தில் விளம்பரம் செய்த மர்ம நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம், கெவாடியாவில் 182 அடி உயரத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது 'ஒற்றுமை சிலை' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு பணிகளுக்கான செலவை ஈடுகட்டுவதற்காகவும், சுகாதார உபகரணங்கள் வாங்குவதற்காகவும் இந்த சிலை ரூ.30 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக வலைதளத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நாளிதழ்களில் செய்தி வெளியானதால் அடையாளம் தெரியாத நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்திய தண்டனைச் சட்டம் தொற்றுநோய்கள் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.