டெல்லியிலிருந்து தாயகம் செல்ல முயன்ற மலேசியர்கள் - விமானத்தில் தப்ப முயன்றபோது பிடிபட்டதாக தகவல்
Apr 6 2020 11:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 10 மலேசியர்கள், டெல்லியில் இருந்து மீட்பு விமானத்தில் தாயகம் செல்ல முயன்றபோது, தடுத்து நிறுத்தப்பட்டனர்.
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டதால், அம்மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் தாமாக முன்வந்து தெரிவிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து, மீட்பு விமானம் மூலம் மலேசியாவுக்கு செல்ல முயன்றதாக 8 பேர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து தப்பிக்க முயன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.