மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி தொடக்கம் : மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் அறிவிப்பு
Apr 6 2020 11:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுக்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் பணிகளை உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தொடங்கிவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் புனியா சலிலா உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுக்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன- தற்போது உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் பணிகளை தொடங்கிவிட்டனர். அதேவேளையில் எந்தெந்த நாடுகளில் இருந்து பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்கிறதோ அதை வாங்கும் பணிகளும் நடந்து வருகிறது என தெரிவித்தார். அதேபோல் நாடு முழுவதும் 13.6 லட்சம் தொழிலாளர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களால் தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படுகிறது" என உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் புனியா சலிலா தெரிவித்தார்.