சுகாதாரப் பணியாளர்களை பாதுகாக்க வேண்டும் : காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

Apr 6 2020 11:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்‍கும் நடவடிக்‍கையில், அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டுள்ள, பல்லாயிரக்‍கணக்‍கான சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாப்பது அரசு மற்றும் மக்‍களின் கடமை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

'We are proud of you' என்ற Hashtag-வுடன், திருமதி. பிரியங்கா காந்தி இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், கொரோனா வைரஸ் தொற்றுக்‍கு எதிராக தொடுக்‍கப்பட்டுள்ள போரில், இந்திய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைக்‍ கூடங்களின் தொழில்நுட்பவியலாளர்கள், சுகாதாரம் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோர்தான் போர் வீரர்கள் -கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் இவர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடும், துணிச்சலோடும் ஈடுபட்டுள்ளனர் என்றும் திருமதி. பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். இக்‍கட்டான இந்தத் தருணத்தில், தியாக உணர்வோடு பணியாற்றி வரும் இவர்களையும், இவர்களின் குடும்பத்தாரையும் ஆதரித்து, உதவிகள் செய்வதும், உரிய பாதுகாப்பு அளிக்‍க வேண்டியதும், நாட்டில் உள்ள அனைத்து மக்‍களின் கடமை என்றும் தனது ட்விட்டர் பதிவில் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00