பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோதி ஆலோசனை நடத்த வேண்டும் : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
Apr 6 2020 11:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கைத்தட்டி, விளக்கேற்ற சொல்வதை விட்டுவிட்டு, பொருளாதார நிபுணர்களை அழைத்து அவர்களின் ஆலோசனைபடி பிரதமர் நடக்க வேண்டுமான புதுச்சேரி மாநில முதலமைச்சர் திரு.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் திருமதி கிரண்பேடி, பாரதி பூங்கா அருகே உள்ள ஆளுநர் மாளிகையில், அனைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு, கையில் அகல் விளக்கேற்றி ஒளிர செய்தார்.
இதேபோல் முதலமைச்சர் திரு. நாராயணசாமி, எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள தனது இல்லத்தில், மின் விளக்குகளை அனைத்துவிட்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கொரோனாவிற்கு எதிராக ஆதரவு தெரிவித்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய திரு. நாராயணசாமி, முன்னதாக தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுள்ளது என்றும், கைத்தாட்டுவதாலும், ஒளி ஏற்றுவதாலும் கொரோனா தொற்று தாக்கம் குறையாது என கூறினார். பொருளாதாரத்தை மேம்பட்டுத்த, பொருளாதார நிபுணர்களை அழைத்து பிரதமர் ஆலோசனை நடத்தவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.