மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள் அடுத்த சில மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் - கொரோனா வைரஸை தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை
Apr 6 2020 11:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த சில மாதங்களுக்கு அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகையே உலுக்கி வரும் கொரோனா, இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அனைவரும் அடுத்த சில மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என அரசு உத்தரவிட்டுள்ளது. முகக்கவசம் இல்லாமல் யாரும் அலுவலகங்களுக்குள் அனுமதிக்கமாட்டார்கள் என்றும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்றை முற்றிலுமாக தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.