ஏழைகளின் துயரங்களை உணர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகள் ஒருவேளை உணவு வழங்க வேண்டும் - ஊரடங்கு நிலையை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோதி வேண்டுகோள்
Apr 6 2020 12:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஏழை மக்களின் துயரங்களை உணர்ந்து. அனைத்து பா.ஜ.க. நிர்வாகிகளும் மக்களுக்கு ஒருவேளை உணவை வழங்க வேண்டும் என்று பிரதமர் திரு. மோதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாரதிய ஜனதாவின் 40-வது ஆண்டு தினத்தையொட்டி, பிரதமர் திரு. மோதி ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுங்கள். சமூக விலகளை கடைபிடியுங்கள். ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களை உணர்ந்து, அவர்களுக்கு அனைத்து பாஜக நிர்வாகிகளும் ஒருவேளை உணவு வழங்குங்கள். ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டத்தின் கீழ் சுமார் 5 நபர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்குங்கள். பிரதமர் நிவாரண நிதிக்கு, நிதியுதவி பெற்றுத்தாருங்கள் என திரு. மோதி, பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.