மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் முடிவெடுத்தது தவறு : மத்திய அரசுக்கு காங். மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கண்டனம்
Apr 6 2020 12:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் தேசிய ஊரடங்கை அறிவித்தது மாபெரும் தவறு என மத்திய அரசை, காங்கிரஸ் மூத்த தலைவா் திரு. வீரப்ப மொய்லி கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகிய காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளைக் கண்காணிப்பதற்காக, காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் திரு. வீரப்ப மொய்லி, திரு. ப.சிதம்பரம், திரு. ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனா்.
இந்நிலையில், மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் திடீரென்று தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியதாகவும், இவ்விவகாரத்தில் மத்திய அரசும், பிரதமா் திரு. நரேந்திர மோதியும் மாபெரும் தவறை செய்து விட்டதாகவும், திரு. வீரப்ப மொய்லி குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த அறிவிப்பால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஊரடங்கு முடிந்த பின்னர், ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிந்தைய நடைமுறைகள் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் இல்லாவிடில் மேலும் குழப்பங்கள் அதிகரிக்கும் என்றும் திரு. வீரப்ப மொய்லி எச்சரித்துள்ளார்.