அமெரிக்கா, சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் கொரோனாவின் வேகம் மிகவும் குறைவு என்றும், அதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆராய்ச்சி மருத்துவரான திரு. நரேந்திர குமார், 3 காரணங்கள்தான், இந்திய மக்களை கொரோனாவில் இருந்து காத்து வருவதாக விளக்கமளித்துள்ளார்.
இந்திய மக்களுக்கு பொதுவாக அதிக நோய் எதிர்ப்பு சக்தி உண்டு என்றும், வைரஸ், பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகளால் இந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், கெட்டதிலும் ஒரு நன்மை என்பது போல, அதிக வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்தியர்களின் உடலில் குறிப்பிட்ட T-செல்கள் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நம் உடலை பாதுகாப்பதில் போர் வீரனைப் போன்று, T-செல்கள் செயல்படுவதாகவும், வெளியில் இருந்து ஏதேனும் புதுவிதமான வைரசுகள் நம் உடலில் நுழைந்தால், T-செல்கள் தாக்கி அழித்துவிடும் என்றும் கூறியுள்ளார்.
வைரஸ் நோய்களில் இருந்து மீள்வதற்கு இந்தியாவில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதன் வீரியம், இன்றளவும் இந்தியர்களின் உடலில் உள்ளதால், தற்போது உரிய பலனை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும், மஞ்சள், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, ஏலக்காய், கிராம்பு, புதினா, கருஞ்சீரகம் போன்ற மசாலா பொருட்கள் அனைத்திற்கும் தனித் தனி மருத்துவ குணங்கள் இருப்பதால், அவை, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதாகவும் டாக்டர் நரேந்திர குமார் விளக்கமளித்துள்ளார்.