நாட்டிலேயே முதன் முறையாக நடமாடும் கொரோனா பரிசோதனை மையம் - கேரளாவில் அரசு சார்பில் ஏற்பாடு
Apr 6 2020 5:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் முதன் முறையாக நடமாடும் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருவதால், அங்கு அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பரிசோதனை செய்யும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நவீன பாதுகாப்பு அறையை எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களுக்கு போதுமான அளவுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க சிக்கல் இருந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு அதிக அளவில் பரிசோதனை செய்ய வசதியாக இந்த நடமாடும் பரிசோதனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கலாம்சேரி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் இந்த பரிசோதனைக் கூடத்தை வடிவமைத்துள்ளனர்.