மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உம்பன் புயல் தாக்கிய பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம்
May 25 2020 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உம்பன் புயல் தாக்கிய பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உம்பன் புயலின் கோரத்தாண்டவத்தால், மேற்குவங்க மாநிலத்தில் 72 பேர் பலியான நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள், வீடுகள் சேதமடைந்தன. கொல்கத்தாவில் புயல் தாக்கிய பகுதிகளில் ராணுவ வீரர்கள், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளின் குறுக்கே விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளை செய்தனர்.