மக்களின் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்த வேண்டும் - வர்த்தக விமான நிறுவனங்கள் போல் செயல்படக்கூடாது : உச்சநீதிமன்றம் கண்டனம்

May 25 2020 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்களின் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்த வேண்டும் எனவும், வர்த்தக விமான நிறுவனங்கள் போல் செயல்படக்கூடாது எனவும், உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில், நடுவரிசை இருக்கை காலியாக இருக்குமென மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை, அண்மையில் மாற்றிய மத்திய அரசு, உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமே இந்த சுற்றறிக்கை பொருந்தும் எனவும், வெளிநாட்டிலிருந்து வரும் விமானங்களில், நடுவரிசை இருக்கையில், பயணிகள் அமர வைக்கப்படுவர் என தெரிவித்தது. இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், வெளிநாட்டிலிருந்து வரும் ஏர் இந்தியா விமானங்களிலும் நடு வரிசை இருக்கைகள் காலியாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில், காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜராகி வாதாடிய சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கொரோனாவைத் தடுப்பதற்கான சிறந்த வழி, பரிசோதனை தானே தவிர, சமூக விலகல் அல்ல எனவும், நிபுணர்களிடமும் ஆலோசித்த பின்னரே நடுப்பகுதி இருக்கை நிரப்பப்பட்டதாகவும் தெரிவித்தார். வைரசிற்கு விமானம் என்ற பாகுபாடு தெரியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், சமூக விலகல் இல்லாமல் அமர்ந்திருந்தால் வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் நிச்சயம் உள்ளாதாகத் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, "வரும் 6-ம் தேதி வரை அனைத்து முன்பதிவும் முடிந்துவிட்டதாகவும், நடுப்பகுதி இருக்கையும் நிரப்பப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, வரும் 6-ம் தேதி வரை, நடுப்பகுதி இருக்கையில் பயணிகளை அமரவைத்துக் கொள்ள அனுமதித்த நீதிபதிகள், அதற்கு பின்னர், நடுப்பகுதி இருக்கையை முன்பதிவில் காட்டக்கூடாது எனத் தெரிவித்தனர்.

வர்த்தகரீதியில் செயல்படும் விமான நிறுவனங்கள் போல் செயல்படாமல், மக்களின் நலனில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், தேவைப்பட்டால் மும்பை உயர் நீதிமன்றம் வரும் 2-ம் தேதி, இவ்விவகாரத்தை விசாரிக்கலாம் என தெரிவித்தனர். மும்பை உயர் நீதிமன்றம் அளிக்கும் உத்தரவை ஏர் இந்தியா மட்டுமல்லாமல், மற்ற விமான நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும்" எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00