கொரோனா ஊரடங்கால் CBSE 10, 12-ம் வகுப்புகளுக்கான விடுபட்ட தேர்வுகள் : 15,000 மையங்களில் நடைபெறும் - மத்திய அரசு
May 26 2020 12:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொது ஊரடங்கு காரணமாக நடத்த முடியாமல் போன CBSE 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான சில தேர்வுகள் 15 ஆயிரம் மையங்களில் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் CBSE 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு சில பாடங்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறவில்லை. சில பகுதிகளில் தேர்வு நடத்தப்படவில்லை. எனவே அந்த பகுதிகளிலும் மற்றும் மீதம் உள்ள பாடங்களுக்கும் வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 3 ஆயிரம் மையங்களில் தேர்வு நடைபெறும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சமூக இடைவெளியை பின்பற்றும் வகையிலும், மாணவர்களின் பயண தூரத்தை குறைக்கும் வகையிலும், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 15 ஆயிரம் மையங்களில் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.