ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் மீண்டும் கார் குண்டு தாக்‍குதலுக்கு சதி - தீவிரவாதிகளின் திட்டத்தை முறியடித்த பாதுகாப்புப் படையினர்

May 28 2020 3:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டை போலவே கார் குண்டு மூலம் தாக்‍குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளின் சதி திட்டத்தை பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர்.

புல்வாமா மாவட்டம் லேத்போராவில், கடந்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம், எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து, கார் வெடிகுண்டு தாக்‍குதல் நடத்தப்பட்டது. இதில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்நிலையில், அதே போன்ற தாக்‍குதலுக்‍கு திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளின் சதியை பாதுபாப்புப்படை வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். ராஜ்போரோ பகுதியில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதாக பாதுகாப்பு படையினருக்‍கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட வீரர்கள், வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை கண்டுபிடித்து, வெடிகுண்டுகளை செயலிழக்‍கச் செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்‍கப்பட்டுள்ளதாக தெரிவித்த பாதுகாப்பு படையினர், காரை ஓட்டி வந்த தீவிரவாதி தப்பிவிட்டதாவும், அவனை தேடி வருவதாகவும் கூறியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00