ஒவ்வொரு மாநிலமும் குறைந்தது ஒரு நகரத்திலாவது, வீடுகள் மற்றும் கட்டடங்களின் மேலே சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டதை செயல்படுத்த வேண்டும் - பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தல்
May 28 2020 3:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் குறைந்தது அதன் ஒரு நகரத்திலாவது, வீடுகள் மற்றும் கட்டடங்களின் மேலே சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டதை செயல்படுத்த வேண்டும் என பிரதமர் திரு. மோதி வலியுறுத்தியுள்ளார்.
மின் அமைச்சகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து, பிரதமர் திரு. நரேந்திர மோதி இன்று ஆய்வு செய்தார். அப்போது மின் கட்டணம் மாற்றியமைத்தல், மின்சார சட்ட மசோதாவின் கொள்கை முன்னெடுப்புகள், மின்துறை எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் உள்ளிட்டவை குறித்து, அந்தந்தத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மின்துறையில் பயன்படுத்தப்படும் கருவிகள், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மாநிலத்தின் ஒரு நகரத்திலாவது வீடுகள் மற்றும் கட்டடங்களின் மேலே சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டதை செயல்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தினார். சூரிய ஒளி மின்னாற்றலில் இயங்கும் மோட்டார், குளிர்பதனக் கிடங்குகள் ஆகியவற்றை அமைக்க முழுமையான அணுகுமுறை வேண்டும் என்றும் பிரதமர் திரு. மோதி தெரிவித்தார்.