கொரோனா நெருக்கடி சூழலில், கட்டணம் வசூலிப்பதில் மாணவர்களை நிர்பந்திக்கக் கூடாது - கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தல்
May 28 2020 4:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா நெருக்கடி சூழலில், கட்டணம் வசூலிப்பதில் மாணவர்களை நிர்பந்திக்கக் கூடாது என கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.
ஆண்டு கட்டணம், செமஸ்டர் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்டவற்றை உடனடியாக செலுத்த, பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் வற்புறுத்துவதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் புகார்கள் வந்துள்ளதாக யூ.ஜி.சி. தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, கட்டண நடைமுறையை அணுக, கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு வலியுறுத்தியுள்ளது. நெருக்கடி நிலை சரியாகும்வரை, கட்டணம் வசூலிப்பதில் மாணவர்களை நிர்பந்திக்கக் கூடாது என்றும், இதுகுறித்து மாணவர்களின் கோரிக்கையை பரிசீலிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.